Monday, April 21, 2008

சித்திரைத் திருவிழா காரணீஸ்வரம் - 12

நடராஜர் உற்சவம்
சிதரா பௌர்ணமி உற்சவ தீர்த்தவாரி
பெருவிழாவின் பத்தாம் நாள் அதிகாலை முதல் உற்சவங்கள்தான். அதிகாலை ஆனந்த நடராசர் சிவகாம சுந்தரி அம்பாளுக்கும், காரைக்கால் அம்மையார், மாணிக்க வாசகர், வியாக்ரபாதர், பதஞ்சலிக்கும் அபிஷேகம். பின் ஆன்ந்த தாண்டவக் கோலத்துடன் அம்பலக்ககூத்தர் அம்மை சிவகாமவல்லியுடன் மாட வீதி வலம் வந்து அருள் தரிசனம் தருகின்றார்.









பின்னர் 11 மணியளவில் தீர்த்த வாரி பஞ்ச மூர்த்திகளும் இந்திர தீர்த்தத்திற்கு எழுந்தருளி தீர்த்தம் கொடுக்கின்றனர் சித்ரா பௌர்ணமியன்று. குளக்கரையில் அஸ்திர தேவருக்கு அபிஷேகம் நடைபெறுகின்றது. முளைப்பாலிகை இட்ட மண் மற்றும் கங்கணங்கள் கங்கை சேர்க்கப்படுகின்றன. திருக்குளத்தில் திருமுழுக்கிட்டு குளத்தை தூய்மைப்படுத்துகிறார் அஸ்திர தேவர் அப்போது பகதர்களும் குளத்தில் மூழ்குகின்றனர்.


தீர்த்தம் கொடுக்க வரும் காரணீஸ்வரப் பெருமான்

சிவ சொர்ணாம்பிகை அம்மன்

அஸ்திர தேவர்

இந்திரக் குளக்கரையில் பஞ்ச மூர்த்திகள்

அடுத்த பதிவில் அம்மையப்பரின் திருக்கல்யாண கோலத்தைக் காணலாம்.

No comments: