Thursday, May 7, 2009

திருக்காரணி வெள்ளி விருஷப சேவை -1

ஐந்தாம் நாள் மாலை வெள்ளி விருஷப சேவை

பெருவிழாவின் ஐந்தாம் நாள் மிகவும் முக்கியமான நாள் ஏனென்றால் ஐயன் தனது ரிஷப வாகனத்திலும், மற்ற மூர்த்திகளும் தத்தம் வாகனத்தில் நம் இல்லம் தேடி வந்து தரிசனம் தந்து அருளுகின்றனர்.

வெள்ளிக் கொம்பர் விநாயகர்

வாகனங்கள் ஒவ்வொன்றும் அற்புதமான தத்துவங்களை உள்ளடக்கியவை. அவை தன் வடிவங்களாலும் இயல்புகளாலும் உயர்ந்த உட்பொருளை உணர்த்துகின்றன.

அலங்கார மண்டபத்தில் பஞ்ச மூர்த்திகள்

விருஷப சேவைக்குப் புறப்படும் தேவ தேவர்மஹாதேவர் பரம கருணா மூர்த்தி, தியாகராஜசுவாமி காரணீஸ்வரர்

திருக்கோவில்வலம் வரும் போது இராஜ நடையில் வரும் காரணீஸ்வரப் பெருமாள்




சுந்தரேஸ்வரர் முக அழகு

எத்தனை கோடி யுக தவமோ இப்படி ஒரு அழகைக் காண,

ஐயனின் பின்னழகு

கொண்டைமுடி அலங்கரித்து கொஞ்சும் கிளி கையில் வைத்து எழிலாக பவனி வரும் அம்மை சொர்ணாம்பிகை.

இன்றைய தினம் சிறப்பு தினம் என்பதால் அம்மனுக்கு அலங்காரமும் அற்புதம். ஜடை அலங்காரம் பாருங்கள்

மயில் வாகனத்தில் புறப்படதயாராக இருக்கும் சிவசுப்பிரமணிய சுவாமி

சண்டிகேஸ்வரர்

ஐயனுக்கு வெள்ளி ரிஷபம்

ஐயன் இன்ரைய தினம் தர்ம தேவதையாம் வெள்ளை ரிஷபத்தில் எழுந்தருளி அருள் பாலிக்கின்றார். எனவே எல்லாத்தலங்களிலும் ஐயனுக்கு வெள்ளி ரிஷப வாகனமே அதிகமாக பயன்படுத்தப்படுகின்றது. அதே சமயம் அம்மன் தங்க ரிஷப வாகனத்தில் சேவை சாதிக்கின்றாள்.

அம்மனுக்கு தங்க முலாம் ரிஷபம்
முருகருக்கு தங்க முலாம் மயில் வாகனம்

ஆணவத்தின் வடிவான சூரபத்மனை சுப்பிரமனியர் வதம் செய்யவில்லை சம்ஹாரம் செய்து அருளினார். ஞானவேல் பட்டதால் அவன் ஆணவம் நீங்கி முருகன் அருள் பெற்றான். வண்ண மயில் தோகை விரித்தாடும் போது ஓம் என்னும் பிரணவ வடிவம். எனவே பிரணவத்த்தின் பொருளை பரமனுக்கு உரைத்த சுவாமிநாதரை மயில் வாகனத்தில் தரிசனம் செய்யும் போது நம் அஞ்ஞானம் விலகும்.
விருஷப சேவை தொடரும்....

No comments: